பட்டினியில் மடியும் குழந்தைகள்.. துயரக் காட்சிகள்

பாலஸ்தீனத்தில் நிலவும் கடும் உணவுப்பற்றாக்குறை மற்றும் போரால் ஏற்பட்ட நெருக்கடியால், டஜன்கணக்கில் குழந்தைகள் பட்டினியில் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் தூதர், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உருக்கமான வார்த்தைகளில் கூறியுள்ளார். தாய்மார்கள், தங்கள் உயிரிழந்த குழந்தைகளை ஆரத்தழுவி அழுதுகொண்டே தலைமுடியை தடவிப் பேசும் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் இருப்பதாக அவர் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.
இந்த துயரமான நிலையை மாற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும் என்றும், மனிதாபிமான உதவிகளை விரைவாக அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் தூதர் வலியுறுத்தினார். குழந்தைகள் பட்டினியில் மரணமடைவது ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வாக இருப்பதுடன், இது ஒரு சுதந்திரமான சமுதாயத்தின் தோல்வியை குறிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தச் சோக நிலை முடிவடைய அனைத்துநாடுகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.