நெல் கொள்முதல் இலக்கை உயர்த்தக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நெல் கொள்முதல் இலக்கை உயர்த்தக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் நடப்பு கரீப் பருவத்தில் நெல் உற்பத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், அரிசி கொள்முதல் இலக்கை உயர்த்துமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டதாலும், மேம்பட்ட பயிர் மேலாண்மை முறைகளாலும் விளைச்சல் அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் மத்திய அரசு நிர்ணயித்த 16 லட்சம் மெட்ரிக் டன் இலக்கை தமிழகம் ஏற்கனவே எட்டிவிட்டதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாளொன்றுக்கு 50,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், மொத்த அளவு 47.50 லட்சம் மெட்ரிக் டன்னை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் கிடைப்பதை உறுதி செய்ய, அரிசி கொள்முதல் இலக்கை 32 லட்சம் மெட்ரிக் டன்னாக மாற்றியமைக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் நலன் கருதி இந்த கோரிக்கையை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *