நெதர்லாந்து மருத்துவமனையில் அதிர்ச்சி 16 குழந்தைகளுக்கு தந்தையான மருத்துவரின் ரகசியம் அம்பலம்

நெதர்லாந்து மருத்துவமனையில் அதிர்ச்சி 16 குழந்தைகளுக்கு தந்தையான மருத்துவரின் ரகசியம் அம்பலம்

நெதர்லாந்தின் ரைன்ஸ்டேட் மருத்துவமனையில் 1970 மற்றும் 80-களில் பணியாற்றிய கருத்தரிப்பு நிபுணர் டாக்டர் அலெக்சாண்டர் ஸ்மௌட்சிகுயர், தம்பதிகளுக்குத் தெரியாமல் தனது சொந்த விந்தணுவைப் பயன்படுத்தி குறைந்தது 16 குழந்தைகளை உருவாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. டிஎன்ஏ சோதனைகள் மூலம் இந்த உண்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முறையான அனுமதி இன்றி அவர் செய்த இந்த செயல் பெரும் மருத்துவ மோசடியாகக் கருதப்படுகிறது.

தற்போது 40 முதல் 50 வயதுடைய அந்தப் பிள்ளைகளும் அவர்களது தாயார்களும் இந்த உண்மையைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக அந்த மருத்துவர் மீது மோசடி மற்றும் தார்மீக விதிமீறல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க முன்வந்துள்ள மருத்துவமனை நிர்வாகம், இச்சம்பவம் ஒரு கடுமையான தார்மீக வீழ்ச்சி என வருத்தம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *