நாடாளுமன்ற முட்டுக்கட்டை தொடர்கிறது, ‘ஆபரேஷன் சிந்துார்’ விவாதம் அடுத்த வாரம்
July 24, 2025

நாடாளுமன்றம் தொடர்ந்து மூன்று நாட்களாக முடங்கியுள்ளது. புதன்கிழமை அன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இருவரின் பிடிவாதமான நிலைப்பாட்டால் இந்த முட்டுக்கட்டை நீங்கவில்லை. பீகார் எஸ்ஐஆர் விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வரும் நிலையில், அரசு அதற்கு உடன்படவில்லை. இதனால் அவைக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ‘ஆபரேஷன் சிந்துார்’ குறித்த விவாதம் அடுத்த வாரம் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.