நாங்கள் கத்தார் அல்ல இஸ்ரேலுக்கு பாகிஸ்தான் விடுத்த அதிரடி எச்சரிக்கை
March 27, 2026

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தங்களை கத்தார் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம் எனவும், தூதரக அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் இஸ்ரேல் மறக்க முடியாத பதிலடியைச் சந்திக்க நேரிடும் என்றும் பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
இந்தத் தாக்குதலின் போது தூதரக ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் முயற்சி செய்து வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. துருக்கி மற்றும் எகிப்து நாடுகளும் இந்த விவகாரத்தில் சமரசம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.