நடிகர் தர்மேந்திராவின் திடீர் மரணம் மகளுக்கு சொத்து வேண்டாம் அவர் கேட்டது ஒரு ஸ்பெஷல் கார்

பிரபல நடிகர் தர்மேந்திராவின் மறைவு பாலிவுட் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது 90வது பிறந்தநாளுக்கு முன்னதாகவே அவர் மும்பையில் உள்ள தனது பூர்வீக வீட்டில் காலமானார். இருப்பினும், ஹேமமாலினி மற்றும் அவர்களது இரண்டு மகள்களான இஷா மற்றும் அஹானா தியோலுக்கு இந்த வீட்டிற்குள் நுழைய அனுமதி ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால், தர்மேந்திராவின் இளைய மகள் அஹானா தியோல், தனக்கு தந்தையின் சொத்துக்கள் வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக அவருக்கு மிகவும் பிடித்த விண்டேஜ் காரை மட்டும் பெற விரும்புவதாகவும் முன்னர் தெரிவித்திருந்தார். அஹானாவுக்கு அது வெறும் கார் அல்ல, தந்தையுடன் கழித்த பல பால்ய கால நினைவுகள் அதனுடன் இணைந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
ஒரு பழைய பேட்டியில் அஹானா தியோல், தனது ஆறு வயதில் லோனாவாலாவில் உள்ள தந்தையின் பண்ணை வீட்டிற்குச் சென்றபோது, அவர் தன்னை மடியில் உட்கார வைத்து அழைத்துச் சென்றதாகப் பகிர்கிறார். அது அவருக்கு மிகவும் பொக்கிஷமான நினைவுகளில் ஒன்று என்றும் கூறினார். மேலும், சிறுவயதில் தனது பெற்றோரை திரையில் மற்றவர்களுடன் காதல் காட்சிகளில் பார்ப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும், அதை தனது தாய் ஹேமமாலினி அது நடிப்பு என்று விளக்கினார் என்றும் அஹானா தெரிவித்தார். தர்மேந்திரா தனது முதல் மனைவி பிரகாஷ் கௌரை ஒருபோதும் விவாகரத்து செய்யவில்லை, இருப்பினும், அவர் 1980 இல் ஹேமமாலினியை திருமணம் செய்துகொள்ள இருவரும் மதம் மாறியதாகக் கூறப்படுகிறது.