நடராஜரின் காலடியில் மிதிப்பட்டிருக்கும் அந்த உருவம் யார் தெரியுமா
December 18, 2025

சிவபெருமானின் நடராஜர் திருவுருவத்தில் காலடியில் மிதிப்பட்டிருக்கும் குள்ளமான உருவம் ‘அபஸ்மாரா’ அல்லது ‘முயலகன்’ என்று அழைக்கப்படுகிறது. இது மனிதனின் அறியாமை, ஆணவம் மற்றும் குழப்பத்தின் அடையாளமாகும். புராணங்களின்படி முனிவர்களின் அகந்தையில் இருந்து பிறந்த இந்த அரக்கனை அடக்கவே சிவபெருமான் திருநடனம் புரிந்தார்.
அறியாமையை முற்றிலுமாக அழிக்க முடியாது என்பதால், சிவன் முயலகனை கொல்லாமல் தனது காலால் அழுத்தி வைத்துள்ளார். அறியாமையை எப்போதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்பதே இதன் தத்துவமாகும். இந்த நடராஜர் கோலம், நாம் முன்னேற வேண்டுமானால் நமது அகங்காரத்தையும் அறியாமையையும் ஒடுக்க வேண்டும் என்ற மிகச்சிறந்த பாடத்தை நமக்கு போதிக்கிறது.