தொகுதி மறுசீரமைப்பு: தென் மாநிலங்களின் உரிமையை பாதுகாப்போம் – டிகே சிவக்குமார்

தொகுதி மறுசீரமைப்பு: தென் மாநிலங்களின் உரிமையை பாதுகாப்போம் – டிகே சிவக்குமார்

கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார், சென்னையில் நடந்த கூட்டத்தில், “தென் மாநிலங்களின் உரிமைகளையோ, தொகுதிகளையோ எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்று உறுதியாக தெரிவித்தார். சென்னை வந்தடைந்த அவர், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான போராட்டத்தின் முதல் கட்டமாக இந்த கூட்டம் நடைபெறுவதாகவும் கூறினார்.

தொகுதி மறுவரையறைக்கு எதிராக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் கூட்டு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால் அவர்களின் தொகுதிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது. மத்திய பாஜக அரசு, தொகுதி மறுவரையறையை கொண்டு வந்து நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது. இதனால் தென் மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்படுவதை கண்டித்து இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கூட்டம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எதிர்பார்ப்பு எழுப்பிய இந்த கூட்டத்தில், தென் மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *