தேர்தல் நேரத்தில் தந்தை மகன் மோதல் முடிவுக்கு வருமா நீதிமன்றம் எழுப்பியுள்ள முக்கிய கேள்வி

தேர்தல் நேரத்தில் தந்தை மகன் மோதல் முடிவுக்கு வருமா நீதிமன்றம் எழுப்பியுள்ள முக்கிய கேள்வி

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தந்தை மற்றும் மகன் இடையிலான தனிப்பட்ட பிரச்சனைகள் விரைவில் சரியாகலாம், ஆனால் கட்சியின் அங்கீகாரம் மற்றும் சின்னம் தொடர்பான விவகாரத்தில் சட்ட ரீதியான முடிவே இறுதியானது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனை இணைப்பது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி தமிழ்செல்வி, இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். ராமதாஸ் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், அன்புமணி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *