தேனீக்கள் ரூபத்தில் ஆபத்து.. பதறும் அமெரிக்கா

தேனீக்கள் ரூபத்தில் ஆபத்து.. பதறும் அமெரிக்கா

மனிதர்களுக்குப் பிரச்சனைகள் எந்த ரூபத்திலும் வரலாம் என்பதற்கு அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவம் ஒரு உதாரணம். சுமார் 25 கோடி தேனீக்களுடன் தேன் அடைக்காகச் சென்ற ஒரு கண்டெய்னர் லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் லாரியில் இருந்த அத்தனை தேனீக்களும் வெளியேறிப் பறந்து சென்றதால், அந்தப் பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

தேனீக்கள் கொட்டுவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் விரைந்து செயல்பட்டனர். விபத்துக்குள்ளான தேனீக்களை மீண்டும் சேகரிக்கும் முயற்சியில், ராணி தேனீயைப் பயன்படுத்தி அவற்றைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தேனீக்களை பத்திரமாக மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *