தூங்கும் முன் மொபைல் பார்க்கும் பழக்கம் உள்ளதா எச்சரிக்கை உங்கள் மூளையை சிதைக்கும் நீல ஒளி

தூங்கும் முன் மொபைல் பார்க்கும் பழக்கம் உள்ளதா எச்சரிக்கை உங்கள் மூளையை சிதைக்கும் நீல ஒளி

தூங்குவதற்கு முன் படுக்கையில் அமர்ந்து மொபைல் போன் பயன்படுத்துவது உங்கள் மூளை மற்றும் உடலை மெதுவாக முடக்கி வருகிறது. மொபைல் திரையில் இருந்து வரும் ‘நீல ஒளி’ தூக்க ஹরমோனான மெலடோனின் உற்பத்தியைத் தடுக்கிறது என்று ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. இதனால் ஏற்படும் தூக்கமின்மை நினைவாற்றல் இழப்பு, மன அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கிறது.

தொடர்ச்சியாக இரவு நேரத்தில் போன் பார்ப்பது வளர்சிதை மாற்றத்தைச் சீர்குலைத்து உடல் பருமனை உண்டாக்குகிறது. மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்கச் செய்து இதயம் தொடர்பான கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. எனவே ஆரோக்கியமான வாழ்விற்கு உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே மொபைல் போனை தவிர்த்துவிட்டு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *