துபாய் மற்றும் அபுதாபியை ஈரான் குறிவைப்பது ஏன் அதிர வைக்கும் பின்னணி இதோ

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கு பதிலடியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபி நகரங்கள் மீது ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சமீபத்திய அறிக்கையின்படி, 298 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 1,600-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை அமீரக பாதுகாப்பு படை தடுத்து அழித்துள்ளது. இந்த தாக்குதல்களில் 6 பேர் பலியாகியுள்ளனர், ஒரு இந்தியர் காயமடைந்துள்ளார். அமீரகத்தில் உள்ள அமெரிக்காவின் அல் தாஃப்ரா விமானப்படை தளம் மற்றும் இஸ்ரேலுடனான ஆபிரகாம் ஒப்பந்தம் போன்ற நெருக்கமான உறவுகளே ஈரானின் இந்த ஆக்ரோஷத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஈரானின் இந்த நடவடிக்கை அமீரகத்தின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறையை சிதைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மற்ற அரபு நாடுகளை விட ராணுவ ரீதியாக அமீரகம் சற்று பலவீனமாக இருப்பதை ஈரான் சாதகமாகப் பயன்படுத்துகிறது. உலகளாவிய வர்த்தக மையமான துபாயை தாக்குவதன் மூலம், அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த ஈரான் திட்டமிடுகிறது. இந்த தொடர் ஏவுகணை வீச்சுகளால் விமான போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.