தீபு தாஸ் கொடூர கொலை: வங்கதேசத்திற்கு இந்தியா கடும் எச்சரிக்கை – வெளிவந்த உண்மை!

வங்கதேசத்தின் மைமன்சிங்கில் தீபு சந்திர தாஸ் என்ற இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் உள்ள தூதரகப் பாதுகாப்பு குறித்து வதந்திகளை மறுத்த அவர், சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரினார்.
விசாரணையில், தீபு மீது சுமத்தப்பட்ட மத நிந்தனை குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனத் தெரியவந்துள்ளது. ஆதாரங்கள் எதுவுமின்றி கும்பலால் அவர் படுகொலை செய்யப்பட்டதை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வியானா ஒப்பந்தத்தின்படி தூதரகப் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து இந்தியா தனது ஆழ்ந்த கவலையை பதிவு செய்துள்ளது.