திஷா படானி துப்பாக்கிச் சூடு வழக்கில் இரண்டு சிறுவர்கள் கைது

நடிகை திஷா படானியின் வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில் தொடர்புடைய இரண்டு சிறுவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த செப்டம்பர் 12 அன்று நடந்த இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இரண்டு முக்கிய குற்றவாளிகளும் தப்பி ஓடியிருந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பிரபல கோல்டி பிரார் கும்பல் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு சிறுவர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை அறிக்கையின்படி, மின்னஞ்சல் மூலம் திஷா படானியின் முகவரியை அறிந்த குற்றவாளிகள், இரண்டு சிறுவர்களுடன் சேர்ந்து நடிகையின் வீட்டிற்குச் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அவர்கள் தலைமறைவாக இருந்தனர். கைது செய்யப்பட்ட சிறுவர்கள் கோல்டி பிரார் கும்பலைச் சேர்ந்தவர்கள் இல்லை எனவும், இதுவே அவர்களின் முதல் குற்றம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. கோல்டி பிரார் கும்பலுடன் அவர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை காவல்துறை விசாரித்து வருகிறது.