தாயிடமிருந்து குழந்தையைப் பறித்து கிணற்றில் வீசிய குரங்கு ஒரு டைப்பர் பிஞ்சு உயிரைக் காப்பாற்றிய அதிசயம்

செய்தி பிரிவு : தாயின் மடியில் இருந்த 20 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை குரங்கு ஒன்று பறித்துச் சென்று கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் வனவிலங்குகளின் அச்சுறுத்தல் அதிகரிப்பது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது. எனினும், அந்த குழந்தை அணிந்திருந்த ‘டைப்பர்’ தண்ணீரில் மிதக்க உதவியதால், ஒரு பெரிய விபரீதத்தில் இருந்து பிஞ்சு உயிர் நூலிழையில் காப்பாற்றப்பட்டுள்ளது.
குழந்தையை மீட்ட கிராம மக்கள் உடனடியாக அங்கிருந்த ஒரு செவிலியரின் உதவியுடன் முதலுதவி அளித்தனர். டைப்பர் அணிந்திருந்ததால் குழந்தை தண்ணீரில் மூழ்காமல் இருந்ததே அது உயிர் பிழைக்க முக்கிய காரணமாக அமைந்தது என்று அதன் தந்தை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தற்போது குழந்தை மருத்துவமனையில் நலமாக இருந்தாலும், கிராமப்புறங்களில் குரங்குகளின் அட்டகாசம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது._