தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக பரபரப்பு புகார்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக பரபரப்பு புகார்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பதுரை தேசிய மகளிர் ஆணையத்திற்கு அவசர கடிதம் எழுதியுள்ளார். தூத்துக்குடி பிளஸ் டூ மாணவி கொலை மற்றும் மதுராந்தகம் சிறுமி வன்கொடுமை போன்ற அடுத்தடுத்த கொடூர சம்பவங்கள் மாநில நிர்வாகத்தின் தோல்வியையே காட்டுவதாக அவர் அந்த கடிதத்தில் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் பாதுகாப்பு கோரியும் காவல்துறை அலட்சியமாக செயல்பட்டதே இந்த அசம்பாவிதங்களுக்கு காரணம் என இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார். எனவே, தேசிய மகளிர் ஆணையம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், கடமை தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *