தமிழகத்தின் 66 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிரடியாக உயர்வு ஏப்ரல் 1 முதல் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி
March 15, 2026

தமிழகத்தில் உள்ள 66 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1 முதல் கட்டணம் 5% முதல் 7% வரை உயர்த்தப்படவுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கார் மற்றும் வேன்களுக்கு 40 ரூபாய் வரையிலும், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு 200 ரூபாய் வரையிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மாதாந்திர பாஸ் கட்டணமும் கணிசமாக உயரவுள்ளது.
இந்த அறிவிப்புக்கு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விதிகளை மீறி செயல்படும் மற்றும் காலாவதியான 36 சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஏற்கனவே நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு அச்சத்திற்கு இடையே இந்த கட்டண உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி சாமானிய மக்களைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.