தமிழகத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்த பிரதமர் இன்று ஐந்து புதிய ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்த பிரதமர் இன்று ஐந்து புதிய ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கிறார்

ரயில்களில் நிலவும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றவும் இன்று முதல் தமிழகத்தில் ஐந்து புதிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருச்சியில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கோயம்புத்தூர் – தன்பாத் மற்றும் நாகர்கோவில் – சார்லப்பள்ளி ஆகிய இரண்டு ‘அமிர்த பாரத்’ ரயில்கள் உட்பட மொத்தம் ஐந்து சேவைகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இவை தமிழகத்தின் முக்கிய நகரங்களை ஜார்க்கண்ட், கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களுடன் நேரடியாக இணைக்கும்.

மயிலாடுதுறை – காரைக்குடி மற்றும் பொள்ளாச்சி – பாலக்காடு இடையேயான புதிய ரயில் சேவைகள் உள்ளூர் வணிகத்திற்கும் வேலைவாய்ப்பிற்கும் பெரும் உதவியாக அமையும். நவீன வசதிகள் மற்றும் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் இந்த ரயில்கள், குறிப்பாக வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் பயணத்தை எளிதாக்கும். இந்த புதிய இணைப்பு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *