டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு தற்கொலை படை தாக்குதலுக்கு சபதம் ஏற்ற பயங்கரவாதியை என்ஐஏ கைது செய்தது
December 18, 2025

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (NIA) முக்கிய குற்றவாளியான யாசிர் அகமது தாரைக் கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியைச் சேர்ந்த இவர், இந்த பயங்கரவாதச் சதியில் முக்கியப் பங்காற்றியுள்ளார். விசாரணையில், அவர் ஃபிதாயீன் எனப்படும் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தச் சத்தியம் செய்தது அம்பலமாகியுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த தாக்குதல் நடத்தியவர்களுடன் யாசிர் நெருங்கிய தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேரின் உயிரைப் பறித்த இந்த கொடூரச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள மற்ற நபர்களைக் கண்டறிய என்ஐஏ தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.