டிரம்ப்பின் புதிய விசா விதிகள் இந்தியர்களைப் பாதிக்குமா? – வர்த்தக செயலாளர் விளக்கம்

அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹாவர்ட் லூட்னிக், டிரம்ப் நிர்வாகத்தின் புதிய விசா திட்டத்தை பாராட்டியுள்ளார். வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவிற்கு பெரும் நன்மைகளை கொண்டு வருவார்கள் என்பதையும், அமெரிக்க ஊழியர்களின் வேலைகளைப் பறிக்க மாட்டார்கள் என்பதையும் இது உறுதி செய்யும் என்று அவர் கூறினார். புதிய விதிகளின் கீழ், H-1B விசா கட்டணம் ஆண்டுக்கு $100,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய நிபுணர்களைப் மோசமாக பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் ‘திறந்த எல்லை’ கொள்கைகளால் நாடு சட்டவிரோத குடியேற்றக்காரர்களால் நிரம்பியுள்ளது, இது கடினமாக உழைக்கும் அமெரிக்கர்களுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று லூட்னிக் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் நிர்வாகம் இப்போது இந்த கொள்கையை முழுமையாக மாற்றுகிறது. புதிய விசா திட்டங்கள் அமெரிக்காவிற்கு வரும் தொழிலாளர்கள் நாட்டிற்கு பெரும் பயனை தருவார்கள், கடினமாக உழைக்கும் அமெரிக்கர்களின் வேலைகளை பறிக்க மாட்டார்கள், மேலும் எந்த பங்களிப்பும் இல்லாமல் பொருளாதாரத்தில் இருந்து பயனடைய மாட்டார்கள் என்பதை உறுதி செய்யும்.