டிப்ஸ் கேட்ட UBER.. நோட்டீஸ் அனுப்பிய அரசு

வாடிக்கையாளர்களை விரைவாக பிக்அப் செய்வதற்காக, முன்கூட்டியே டிப்ஸ் வழங்கும் முறையை அறிமுகப்படுத்திய Uber நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த புதிய டிப்ஸ் முறை ஒரு முறையற்ற வர்த்தக நடவடிக்கை என்று கூறி, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இதற்கு முன்னதாகவே தனது கவலைகளை தெரிவித்திருந்தார். சேவை பாராட்டுக்காகவே டிப்ஸ் வழங்கப்பட வேண்டும் என்றும், இது கட்டாயப்படுத்தப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
Uber-ன் இந்த அட்வான்ஸ் டிப்ஸ் முறை, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகவும் பார்க்கப்படுகிறது. இந்த செயல் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் Uber நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசின் நிலைப்பாடு, டிப்ஸ் என்பது ஒரு விருப்பமான செயல் என்றும், சேவைக்கான பாராட்டாக இருக்க வேண்டுமே தவிர, அது கட்டாயமாக கேட்கப்படவோ அல்லது கட்டாயப்படுத்தப்படவோ கூடாது என்பதாகும். இந்த நோட்டீஸ், நுகர்வோர் நலனை பாதுகாக்கும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாகும்.