ஜப்பானிய நிறுவனங்களுக்கு சீனா அதிரடி ஏற்றுமதி தடை விதிப்பால் ஆசியாவில் கடும் பதற்றம்

ஜப்பானின் ராணுவமயமாக்கலுக்கு உதவுவதாகக் கூறி 40 ஜப்பானிய நிறுவனங்கள் மீது சீனா கடுமையான ஏற்றுமதி தடைகளை விதித்துள்ளது. தைவான் விவகாரத்தில் ஜப்பானிய பிரதமர் சனா டகாயிச்சியின் கருத்துக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பெய்ஜிங் மற்றும் டோக்கியோ இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக இருநாட்டு வர்த்தகத்தில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிட்சுபிஷி மற்றும் புஜித்சு உள்ளிட்ட 20 நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை சீனாவிடமிருந்து இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது. மேலும் 20 நிறுவனங்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் இந்த தன்னிச்சையான முடிவிற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது.