சொந்த புகழுக்காக நாட்டின் நலனை அடமானம் வைக்கிறார் மோடி ராகுல் காந்தி கடும் சாடல்

சொந்த புகழுக்காக நாட்டின் நலனை அடமானம் வைக்கிறார் மோடி ராகுல் காந்தி கடும் சாடல்

போபாலில் நடைபெற்ற மகா கிசான் சம்மளனத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி தனது தனிப்பட்ட பிம்பத்தை காக்க நாட்டின் நலன்களை அமெரிக்காவிடம் அடமானம் வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்று அவர் எச்சரித்தார். இந்த ஒப்பந்தத்தினால் அடுத்த ஐந்தாண்டுகளில் 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்.

இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயம் மற்றும் ஜவுளித் துறையை கடுமையாக பாதிக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், பிரதமர் உடனடியாக இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சி தற்போது தொடங்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *