சொத்துரிமை: பூர்வீக சொத்தில் மகளுக்கு சம உரிமை உண்டா? எத்தனை தலைமுறையினர் உரிமைகோரும்?

ஒரு பூர்வீகச் சொத்தில் எத்தனை தலைமுறைகள் உரிமை கோரலாம், மேலும் பெண்களுக்கு அதில் பங்கு உண்டா? இந்து வாரிசுரிமைச் சட்டம் (Hindu Succession Act), 1956-ன் படி, தந்தை, தாத்தா மற்றும் கொள்ளுத் தாத்தாவிடமிருந்து ஒருவருக்கு வாரிசாக வரும் சொத்து ‘பூர்வீகச் சொத்து’ ஆகும். இதில் மூன்று தலைமுறையினரான மகன், பேரன், மற்றும் கொள்ளுப் பேரன் ஆகியோர் பிறப்பிலிருந்தே உரிமை பெறுகின்றனர். இத்தகைய ஏழு தலைமுறை ஆண்களும் ‘கூட்டுப் பங்காளர்கள்’ (Coparceners) என அழைக்கப்படுகின்றனர்.
இந்தச் சட்டம் 2005-ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. அதற்கு முன், திருமணமான பெண்களுக்கு பூர்வீகச் சொத்தில் வரையறுக்கப்பட்ட உரிமையே இருந்தது. திருத்தத்திற்குப் பிறகு, மகன்கள் மற்றும் மகள்கள் இருவருக்கும் சம உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்குப் பிறகும் மகள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் மகனுக்குச் சமமான பங்கை கோரலாம். இருப்பினும், 25.3.1989-க்கு முன் சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால், அதற்கு நீதிமன்றத்தில் உரிமை கோர முடியாது.