சென்னையில் பயங்கர கியாஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் துயர மரணம்
March 15, 2026

சென்னை நாவலூர் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த வணிகமுறை சிலிண்டர் பயங்கரமாக வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் அங்கு வசித்து வந்த நான்கு வயது சிறுமி மற்றும் ஒன்றரை வயது சிறுவன் என இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிகாலையில் சமையல் செய்ய முயன்றபோது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த ஏழு பேர் செங்கல்பட்டு மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விதிமுறைகளை மீறி வீட்டில் சிலிண்டர்களை பதுக்கி வைத்து உணவு தயாரிக்கும் தொழில் செய்ததே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.