சென்னையில் கடல் மட்ட உயர்வு: ஆண்டுக்கு 4.31 மில்லி மீட்டர் உயர்வு பதிவாகிறது

சென்னையில் கடல் மட்ட உயர்வு: ஆண்டுக்கு 4.31 மில்லி மீட்டர் உயர்வு பதிவாகிறது

சென்னை கடற்கரையில் கடல் மட்டம் வருடாந்திர அடிப்படையில் 4.31 மில்லி மீட்டர் அளவிற்கு உயர்வடைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 1993 முதல் 2020 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, இந்த தகவலை வெளியிட்டது.

அதே காலகட்டத்தில், மும்பையில் கடல் மட்டம் 4.59 மில்லி மீட்டர், கொச்சியில் 4.10 மில்லி மீட்டர் மற்றும் பாராதீப்பில் 4.43 மில்லி மீட்டர் உயர்வடைந்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டது. இந்த தகவல்கள், உக்கிரம் அடையும் காலநிலை மாற்றத்தால் இந்தியாவின் கடலோர பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதற்கான எச்சரிக்கை என கருதப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *