சுனிதாவின் வெற்றிகரமான வீடு திரும்பல்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சுமார் 9 மாதங்கள் விண்வெளியில் கழித்த பிறகு பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். அவர் உடன் மற்ற மூன்று விண்வெளி வீரர்களும் வெற்றிகரமாக பூமியில் தரையிறங்கினர். அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் காலை 3.27 மணியளவில் அவர்களின் விண்கலம் ‘ஸ்பிளாஷ் டவுன்’ முறையில் தரையிறங்கியது. தரையிறங்கிய உடனே சுனிதா வில்லியம்ஸ் மகிழ்ச்சியுடன் கையை அலைய்த்தி அங்கு கூடியிருந்த அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார்.
இந்த வெற்றிகரமான தரையிறக்கத்துக்குப் பிறகு, இந்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது சமூக ஊடகப் பதிவில் சுனிதாவின் துணிச்சல், உறுதி மற்றும் அமைதிக்காக பாராட்டுத் தெரிவித்தார். அவரது பாதுகாப்பான திரும்புவதைப் புகழ்ந்து, இது “பெருமை மற்றும் நிம்மதியின் தருணம்” எனக் குறிப்பிட்டார்.
இந்த சாதனையை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி சுனிதாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “உங்கள் சாதனைக்கு இந்தியா மட்டுமல்ல, உலகமே பெருமை கொள்கிறது. இந்திய மக்கள் சார்பாக உங்கள் செயல்பாட்டுக்கு வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.