சிந்தூரை உலக ட்ரெண்டாக மாற்றிய ஐஸ்வர்யா ராய்!

சிந்தூரை உலக ட்ரெண்டாக மாற்றிய ஐஸ்வர்யா ராய்!

கேன்ஸ் திரைப்பட விழா உலகளவில் கலை மற்றும் ஃபேஷன் துறையில் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு நடிகர்களின் ஒவ்வொரு அசைவும், உடை அலங்காரமும், சிகை அலங்காரமும் உலகளாவிய கவனத்தைப் பெறும். இந்த ஆண்டு கேன்ஸ் விழாவில், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் நெற்றியில் குங்குமத்துடன் கலந்துகொண்டது அனைவரின் பார்வையையும் ஈர்த்தது.

ஐஸ்வர்யாவின் இந்த பாரம்பரிய அணுகுமுறை, உலகெங்கிலும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தலைப்பில் மீண்டும் ஒரு புதிய ட்ரெண்டாக மாறியுள்ளது. பலரும் சிந்தூரின் முக்கியத்துவம் மற்றும் அழகைப் பற்றி விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், ஐஸ்வர்யா தனது கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்யப் போவதாக பரவி வந்த வதந்திகளுக்கும், கேன்ஸ் விழாவில் அவர் சிந்தூருடன் தோன்றியதன் மூலம் அமைதியான முறையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

Tama Sarkar
  • Tama Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *