சிட்னி படுகொலை பாண்டி பீச்சில் யூதர்களைத் தாக்கிய நவீத் அக்ரம் பற்றிய தகவல்
December 14, 2025

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி பீச்சில் யூதர்கள் ஹனுக்கா கொண்டாட்டத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது இரண்டு துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஒரு தாக்குதல்தாரியும் அடங்குவார். இறந்த தாக்குதல்தாரிகளில் ஒருவரான நவீத் அக்ரம் (24) சிட்னியின் போனிர்ரிக் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுமார் 2,000 பேர் கொண்ட கூட்டத்தின் மீது கண்மூடித்தனமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் அதிபர் இந்த சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலுக்குப் பிறகு மெல்போர்னில் திட்டமிடப்பட்டிருந்த ஹனுக்கா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.