சிகரெட் விலையில் அதிரடி உயர்வு இனி ஒரு சிகரெட் இவ்வளவு ரூபாயா

2026-27 மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகையிலை பொருட்கள் மீதான வரியை உயர்த்தியதை அடுத்து, நாடு முழுவதும் சிகரெட் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஸ்டெல்லர் டிபைன் பான் விலை 90 சதவீதம் உயர்ந்து 380 ரூபாயாகவும், கோல்ட் ஃபிளேக் ஸ்மால் 140 ரூபாயாகவும் மாறியுள்ளது. முன்பு 10 ரூபாய்க்கு கிடைத்த சில்லறை சிகரெட்கள் தற்போது 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
புதிய வரி விதிப்பின்படி சிகரெட் மீதான ஜிஎஸ்டி 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், கூடுதல் கலால் தீர்வை மற்றும் சுகாதார வரிகளும் விதிக்கப்பட்டுள்ளன. சிகரெட்டின் நீளத்திற்கு ஏற்ப வரி மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் நிறுவனங்கள் இந்த சுமையை நுகர்வோர் மீது சுமத்தியுள்ளன. இளைஞர்கள் மற்றும் புதியவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாவதைத் தடுக்கவே இந்த கடுமையான விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.