சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி

விராட் கோலி என்றும் ஒரு சாதனை வீரராகவே விளங்குகிறார். ஒவ்வொரு போட்டியிலும் புதிய உச்சங்களை தொட்டுக்கொண்டிருக்கும் அவர், தற்போது ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக அரைசதங்கள் அடித்த வீரராக மாறியுள்ளார். லக்னோ சுபர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான அண்மைய போட்டியில், வெறும் 27 பந்துகளில் அதிரடியான அரைசதத்தை (63 ரன்கள்) விளாசிய அவர், இந்த புதிய சாதனையை பதிவு செய்தார்.
இதுவரை அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் 62 அரைசதங்களுடன் இரண்டாவது இடத்தில் மற்றும் ஷிகர் தவான் 51 அரைசதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். ஆனால், இப்போது விராட் கோலி 63 அரைசதங்களை அடித்து, அவர்களைத் தாண்டி நம்பர் ஒன் இடத்தில் வெற்றிகரமாக அமர்ந்துள்ளார். தொடர்ந்து தன்னை முன்நிறுத்திக்கொண்டிருக்கும் விராட் கோலி, இந்திய ரசிகர்களுக்குத் தங்களை பெருமைப்பட வைக்கும் விதமாக தொடர்ந்தும் விளையாடி வருகிறார்.