சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் அவதி மின்சார அடுப்புகளின் விற்பனை புதிய உச்சத்தில்
March 11, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தால் சமையல் எரிவாயு விலை உயர்ந்து விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் கிடைக்க ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழலில், மக்கள் மின்சார அடுப்பு மற்றும் ரைஸ் குக்கர்களை நாடத் தொடங்கியுள்ளனர். இதனால் கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சார சமையல் உபகரணங்களின் தேவை திடீரென 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
சந்தையில் தரமான மின்சார அடுப்புகள் குறைந்த விலையில் கிடைப்பதால் மின்னணு சாதனக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. எனினும், இந்த அதிகப்படியான தேவையைப் பயன்படுத்தி சில வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இருப்பு குறைந்து வருவதால் வரும் நாட்களில் இவற்றின் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.