கோயம்புத்தூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் 43 பேருக்கு நேர்ந்த சோகம் குறித்து எடப்பாடி பழனிசாமி கடும் விளாசல்
March 11, 2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட தரம் குறைந்த மதிய உணவை உட்கொண்ட 43 மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையடுத்து, அவர்கள் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் அலட்சியமே இதற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார். மாணவர்களின் உயிர் விஷயத்தில் அரசு மெத்தனமாக இருப்பதை ஏற்க முடியாது என்றும், விளம்பரங்களில் காட்டும் அக்கறையை உணவின் தரத்தில் காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.