கோடக் மகிந்திரா வங்கிக்கு ஆர்.பி.ஐ கடும் அபராதம்: விதிமீறல்களால் சிக்கிய வங்கி – முழு விவரம்!
December 20, 2025

விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாததற்காக கோடக் மகிந்திரா வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ₹61.95 லட்சம் அபராதம் விதித்துள்ளது. பிஎஸ்பிடி கணக்குகளை நிர்வகித்தல், வணிகப் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் மற்றும் கடன் தகவல் நிறுவனங்களுக்குத் தவறான தரவுகளை வழங்கியது போன்ற விதிமீறல்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் போது, ஒரு வாடிக்கையாளருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அடிப்படை சேமிப்புக் கணக்குகளைத் திறந்ததும், கடன் வாங்குபவர்கள் குறித்த தவறான தகவல்களை அளித்ததும் கண்டறியப்பட்டது. இந்த அபராதம் வங்கி விதிமுறைகளை மீறியதற்காக மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்களின் கணக்குகளை இது பாதிக்காது என்றும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.