கைக்குலுக்குதல் சர்ச்சையில் ரிக்கி பாண்டிங்கின் பெயரில் போலிப் பதிவுகள்: ஆஸ்திரேலிய ஜாம்பவான் கொடுத்த பதிலடி

ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு, இரு அணிகளுக்கும் இடையே கைகுலுக்குதல் சர்ச்சை ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் சில பாகிஸ்தானியப் பயனர்கள் இந்திய அணியை அவமானப்படுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் பெயரைப் பயன்படுத்தி போலி அறிக்கைகளை வெளியிட்டதால் இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்தது. பாண்டிங் இந்திய-பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு இந்தியாவின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்ததாக அந்தப் பதிவுகள் தவறாகக் கூறின.
தன்னுடைய பெயரில் போலிச் செய்திகள் பரப்பப்படுவதை அறிந்த பாண்டிங், தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தான் ஆசிய கோப்பை குறித்து எந்தப் பொதுவான கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதை அவர் தெளிவாகக் குறிப்பிட்டார். பாண்டிங் தனது பதிவில், இதுபோன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் எவ்வளவு எளிதாகப் பரவுகின்றன என்பதைக் காட்டுகிறது.