கேரளாவை அச்சுறுத்தும் ‘மூளை உண்ணும் அமீபா’ உலகளவில் அரிய நோயால் 19 பேர் பலி

கேரளாவில் ‘மூளை உண்ணும் அமீபா’ (Naegleria fowleri) பாதிப்பு அதிகரித்து வருவதுடன், இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின்படி, உலகளவில் இந்த அரிய நோயின் 500க்கும் குறைவான பாதிப்புகளே பதிவாகியுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த அமீபா சூடான மற்றும் அசுத்தமான நன்னீரில் உருவாகிறது. இது மூக்கின் வழியாக உடலுக்குள் நுழைந்து நேரடியாக மூளையைத் தாக்குகிறது. இந்த நோய்க்கு என குறிப்பிட்ட சிகிச்சை முறையோ அல்லது தடுப்பூசியோ இதுவரை இல்லை.
இந்த அமீபா பொதுவாக குளங்கள், ஏரிகள் அல்லது சரியாக குளோரின் கலக்கப்படாத நீச்சல் குளங்களில் காணப்படுகிறது. குளிக்கும்போதோ அல்லது நீந்தும்போதோ அசுத்தமான நீர் மூக்கின் வழியாக உள்ளே செல்லும்போது, அது மூளைக்குச் சென்று ‘பிரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்’ (PAM) எனப்படும் ஆபத்தான நோயை ஏற்படுத்துகிறது. திறந்த நீர்நிலைகளில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த தொற்று விரைவாக பரவுகிறது.