குழந்தைகள் மற்றும் இறந்தவர்களுக்கு கடன் இல்லை: எலன் மஸ்க்”

குழந்தைகள் மற்றும் இறந்தவர்களுக்கு கடன் இல்லை: எலன் மஸ்க்”

அமெரிக்காவின் சிறு வணிக நிர்வாகம் (SBA) மூலம் குழந்தைகள் மற்றும் இறந்தவர்களுக்கு கடன் வழங்கும் முறைகேடுகளை தடுக்க அரசாங்கத்தின் திறன் மேம்பாட்டு துறை (DOGE) புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. எலன் மஸ்க் நிறுவிய இந்த துறை, SBA-வின் கடன் விண்ணப்பங்களில் விண்ணப்பதாரர்களின் பிறந்த தேதியை கட்டாயமாக்கியுள்ளது. இதன்படி, 18 வயதுக்கு குறைவானவர்கள் மற்றும் 120 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கடன் வழங்கப்படாது. இந்த மாற்றம், அரசாங்க நிதியை திருட்டுத்தனமாக பயன்படுத்துவதை தடுக்கும் என்று DOGE தெரிவித்துள்ளது.

மேலும், எலன் மஸ்க் இந்த முன்னெடுப்பை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டு, “குழந்தைகள் அல்லது இறந்துவிட்ட நபர்களின் சமூக பாதுகாப்பு எண்களை திருடி கடன் பெறும் முறைகேடுகள் இனி நடக்காது” என்று குறிப்பிட்டார். 2020-21ல் SBA வழங்கிய கடன் தரவுகளில், 115 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 333 மில்லியன் டாலர் கடன் வழங்கப்பட்டது. இதில், 157 வயது என்று கூறப்பட்ட ஒருவருக்கு 36,000 டாலர் கடன் வழங்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இத்தகைய முறைகேடுகளை தடுக்க DOGE இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *