குல்காமில் ராணுவத்துக்கு பெரும் வெற்றி, ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்
August 2, 2025

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ‘ஆபரேஷன் அகால்’ நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், குல்காமின் அகால் வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
சனிக்கிழமை காலை, மோதலுக்குப் பிறகு ஒரு பயங்கரவாதியின் உடல் மீட்கப்பட்டதுடன், அவனிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவம் பாதுகாப்புப் படையினருக்கு ஒரு பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.