குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்: அமைச்சர் K.N.நேரு அறிவிப்பு

தமிழ்நாட்டில் குப்பைகளை பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் K.N.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறினார். நகரங்கள் விரிவடையும் போது, குப்பைகள் கொட்டும் இடம் நகர மையப்பகுதிக்கு மாற்றப்படுவதாகவும், இதனால் சுகாதார பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், குப்பைகளை கட்டுப்படுத்தவும், அவை வெளியில் பறந்து சிதறாமல் இருக்கவும் குப்பைக்கிடங்குகளைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை நகரங்களில் சுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் குப்பைகளை பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் K.N.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறினார். நகரங்கள் விரிவடையும் போது, குப்பைகள் கொட்டும் இடம் நகர மையப்பகுதிக்கு மாற்றப்படுவதாகவும், இதனால் சுகாதார பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், குப்பைகளை கட்டுப்படுத்தவும், அவை வெளியில் பறந்து சிதறாமல் இருக்கவும் குப்பைக்கிடங்குகளைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை நகரங்களில் சுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.