கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டா?” – மாரியப்பன் தங்கவேலு

செலத்தக்க அனைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே அளவு ஆதரவு வேண்டும் என்று பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு வலியுறுத்தியுள்ளார். சேலத்தில் நடந்த தடகள போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.
மாரியப்பன் தனது அனுபவங்களை பகிர்ந்து, கல்வி காலத்தில் பயிற்சிக்கு கூட சரியான வசதிகள் இல்லை என நினைவுகூர்ந்தார். ஆனால் இன்று மாணவர்களுக்கு தேவையான அனைத்தும் உள்ளது; அதை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டு தமிழகம் மற்றும் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர்களை சந்தித்தபோது, “விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு மிகுந்த ஆதரவாக செயல்படுகிறது” என்றார். கிரிக்கெட் மட்டுமல்ல, மற்ற அனைத்து விளையாட்டுகளுக்கும் சரியான ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உலகளவில் இந்தியாவின் சாதனைகளை மேலும் உயர்த்த அனைத்து விளையாட்டு வீரர்களும் ஊக்கமளிக்கப்பட வேண்டும் என்றார்.