காதலிக்க மறுப்பு.. பள்ளி மாணவி குத்திக் கொலை

காதலிக்க மறுப்பு.. பள்ளி மாணவி குத்திக் கொலை

ராணிப்பேட்டை அருகே உள்ள புலிவலத்தைக் சேர்ந்த ஜெகத்குமார் என்பவரின் மகள் ஜனனி (வயது 15), 10-ம் வகுப்பு படித்து வந்தார். சமுதாயத்தில் மென்மையாக நடந்து கொண்ட இந்த மாணவி, எதிர்பாராத முறையில் நேற்று திடீரென சோகமான முறையில் உயிரிழந்தார். அவரது வீட்டில் தனியாக இருந்தபோது, திடீரென ஒரு இளைஞர் உள்ளே புகுந்து, ஜனனியை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் விழுந்த ஜனனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சத்தம் கேட்ட அருகிலுள்ளவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, கொலை சம்பவம் தெரியவந்தது. உடனடியாக அந்த இளைஞனை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் திருவள்ளூரை சேர்ந்த சுப்பிரமணி (வயது 21) எனக் கண்டறியப்பட்டது. போலீசாரின் விசாரணையில், தனது காதலை ஏற்காததால் கோபத்தில் கொலை செய்ததாக சுப்பிரமணி ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tama Sarkar
  • Tama Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *