காசாவில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல்: இறுதி எச்சரிக்கை!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தற்போது மையமாக காசா பகுதிக்கு மாறியுள்ளது. இஸ்ரேல், சமீபத்தில் வான்வழி தாக்குதலின் பின்னர், இப்போது தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால், மத்திய மற்றும் தெற்கு காசாவில் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் இந்த தாக்குதலை ஆரம்பித்துள்ளது, அதனால் காசாவில் 400க்கும் மேற்பட்டோர் பலி ஆனதாகவும், இஸ்ரேல் அடுத்த கட்டமாக தரைவழி தாக்குதலைத் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், காசா மக்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து, “பணய கைதிகளை விடுவிக்கவும், ஹமாஸ் அமைப்பை அகற்றவும், அதன் பிறகு உலகின் மற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியும்” என்று கூறியுள்ளார். இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியின் வடக்கிலும் தெற்கிலும் படைகளை இறக்கி, போர் வதையத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே, இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் பரிமாறப்பட்டு, போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.