கர்நாடகாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் சம்பளம் இரட்டிப்பு

கர்நாடக சட்டமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ‘கர்நாடக சட்டமன்ற சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பட்ஜெட் (திருத்தம்) மசோதா, 2025’ என்ற சட்டத்தை நிறைவேற்றியது. இந்த மசோதாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சி மற்றும் சட்டமன்ற ஊழியர்களின் சம்பளத்திலும் பட்ஜெட்டிலும் கணிசமான உயர்வு செய்யப்படுள்ளது.
அரசாங்கத்தால் நிதி பற்றாக்குறை இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம், அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ‘ஹனி ட்ராப்’ விவகாரத்தில் ஏற்பட்ட கலவரத்துக்கிடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
மசோதாவின் படி, முதல்வரின் மாத சம்பளம் ரூ.75,000 லிருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சர்களின் சம்பளம் ரூ.60,000 லிருந்து ரூ.1.25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்கள் சம்பளம் ரூ.40,000 லிருந்து ரூ.80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர்களின் வீட்டு வாடகை பட்ஜெட் ரூ.1.20 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டமன்ற தலைவர் மற்றும் சட்டமன்ற கவுன்சில் தலைவர் சம்பளம் ரூ.75,000 லிருந்து ரூ.1.25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பட்ஜெட் தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தினால் அரசாங்கத்திற்கு கூடுதலாக ரூ.62 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.