கணவரைக் கொன்று வீட்டில் புதைத்த மனைவி, உண்மை வெளிவந்தது எப்படி

கவுகாத்தியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், சபியால் ரஹ்மான் என்ற தனது கணவரைக் கொன்று வீட்டின் முன் புதைத்ததாக ரஹீமா காதுன் என்ற பெண்னை போலீசார் கைது செய்தனர். ஜூன் 26 அன்று பாண்டு பகுதியின் ஜாய்மதி நகரில் இந்த சம்பவம் நடந்தது. சபியாலைக் காணாததால், உள்ளூர்வாசிகள் அவரது மனைவியிடம் விசாரித்தபோது, கணவர் வேலைக்காக கேரளா சென்றுவிட்டதாக ரஹீமா தெரிவித்தார். இருப்பினும், ரஹீமாவின் பதில்களில் சந்தேகம் ஏற்பட்டதாலும், உடல்நலக்குறைவு காரணமாக அப்பகுதியிலிருந்து தப்பிக்க அவர் முயன்றதாலும் உள்ளூர்வாசிகளின் சந்தேகம் வலுத்தது.
சபியாலின் சகோதரர் காணாமல் போனதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜூலை 13 அன்று ரஹீமா காவல் நிலையத்தில் சரணடைந்தார். ஆரம்பக்கட்ட விசாரணையில், ஜூன் 26 அன்று இரவு மதுபோதையில் இருந்த கணவருக்கும் தனக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இறுதியில் கணவரைக் கொன்று வீட்டின் முன் புதைத்ததாகவும் ரஹீமா ஒப்புக்கொண்டார். ரஹ்மானின் சடலத்தை போலீசார் மீட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு எவரேனும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்பதையும் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் முஸ்கான்-சவுரவ் அல்லது சோனம்-ராஜ் போன்ற கொடூரமான கொலைகளின் தொடர்ச்சியாகும்.