‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அறிக்கை மீண்டும் தாமதம் குழு கூடுதல் கால அவகாசம் கோரியது
December 12, 2025

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கூட்டு நாடாளுமன்றக் குழு (JPC), நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. அறிக்கையைச் சமர்ப்பிக்க குழு மேலும் கால அவகாசம் கோரியுள்ளது. பாஜக எம்.பி பி.பி. சவுத்ரி தலைமையிலான இக்குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது, அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
தற்போது, இந்த மசோதா குறித்து நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதிகள், தேர்தல் ஆணையர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களிடம் JPC கருத்துக்களைச் சேகரித்து வருகிறது. 2034-க்குள் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை நடைமுறைப்படுத்தும் இலக்கை நோக்கி இக்குழு தனது பணியைத் தொடர்கிறது.