ஐபிஎல் 2026 பயிற்சியில் பிசிசிஐ அதிரடி மற்றும் 10 அணிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகள்

2026 ஐபிஎல் தொடருக்காக அனைத்து 10 அணிகளுக்கும் பிசிசிஐ கடுமையான பயிற்சி விதிகளை வெளியிட்டுள்ளது. ஆடுகளங்களின் தரத்தைப் பராமரிக்கவும் அனைத்து அணிகளுக்கும் சம வாய்ப்பை வழங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி ஒரு அணி பயிற்சி செய்த வலைப்பயிற்சி இடத்தில் மற்றொரு அணி பயிற்சி செய்யக் கூடாது. ஒரு அணி பயிற்சியை விரைவில் முடித்தாலும் அந்த இடத்தை அடுத்த அணி பயன்படுத்த அனுமதி இல்லை.
பயிற்சி போட்டிகளுக்கும் பிசிசிஐ கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஒரு அணி இந்த சீசனில் அதிகபட்சம் இரண்டு பயிற்சி போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும். மேலும், உள்ளூர் அணியின் முதல் போட்டிக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக முக்கிய ஆடுகளத்தில் பயிற்சி செய்ய முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. பயிற்சி நேரத்தை ஒதுக்குவதில் அணிகளிடையே உடன்பாடு ஏற்படாவிட்டால் பிசிசிஐ நேரடியாக தலையிட்டு இறுதி முடிவை அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.