ஐபிஎல் 2026க்கு முன் RCB-யின் அதிரடி முடிவு! 5 முக்கிய வீரர்கள் நீக்கம் விராட் கோலிக்கு காத்திருக்கும் பொறுப்பு

ஐபிஎல் 2025-ல் முதல்முறையாக கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, ஐபிஎல் 2026 சீசனுக்காக தயாராகி வருகிறது. இருப்பினும், அணியின் வழக்கமான கேப்டன் ரஜத் படிதார் காயமடைந்தது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் சுமார் நான்கு மாதங்கள் களத்தில் இருந்து விலகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், RCB தனது வீரர்களை தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் முடிவில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். படிதார் இல்லாத பட்சத்தில், அனுபவ வீரர் விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்பார்.
ஊடக அறிக்கைகளின்படி, RCB சில முக்கிய வீரர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன், ரசிக் சலாம், நுவான் துஷாரா மற்றும் மோகித் ரதி ஆகியோர் விடுவிக்கப்பட வாய்ப்புள்ள பட்டியலில் உள்ளனர். மறுபுறம், ஐபிஎல் 2025 வெற்றிப் பெற்ற அணியின் முக்கிய வீரர்களை RCB தக்கவைக்கவுள்ளது. புவனேஷ்வர் குமார், ஜிதேஷ் சர்மா, குருணால் பாண்டியா, அத்துடன் வெளிநாட்டு வீரர்களான ஜோஷ் ஹேசில்வுட், ஃபில் சால்ட் மற்றும் டிம் டேவிட் போன்றோர் தக்கவைக்கப்படலாம்.