எல்லை பாதுகாப்பு தீவிரம்! வங்கதேச கொலையால் இந்திய எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

எல்லை பாதுகாப்பு தீவிரம்! வங்கதேச கொலையால் இந்திய எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

வங்கதேசத்தில் தீபு சந்திர தாஸ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையில் பதற்றம் பரவாமல் தடுக்க, ஜங்கிபூர் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பி.எஸ்.எஃப் மற்றும் மத்தியப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கதேச நிகழ்வுகள் குறித்து எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்திய எல்லைப் பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க மோட்டார் சைக்கிள் மற்றும் நடைப்பயணம் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநில காவல்துறையும் எல்லைப் பாதுகாப்புப் படையும் இணைந்து இப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள உள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *