எரிபொருள் தட்டுப்பாட்டை போக்க குழாய் மூலம் இந்தியா அனுப்பிய 5 ஆயிரம் டன் டீசல்
March 11, 2026

இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் குழாய் வழியாக 5,000 டன் டீசல் முதற்கட்டமாக வங்கதேசம் வந்தடைந்தது. ஆண்டுக்கு 1,80,000 டன் டீசல் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளதாக பிபிசி தலைவர் முகமது ரேஸானூர் ரஹ்மான் உறுதிப்படுத்தியுள்ளார். அடுத்த இரண்டு மாதங்களில் 90,000 டன் டீசலை இறக்குமதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் டீசல் தேவை நாளொன்றுக்கு 20,000 டன்களாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் இந்த ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கை, போக்குவரத்து செலவைக் குறைப்பதுடன் வங்கதேசத்தின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.