என்ஜாய் எஞ்சாமி ராயல்டி விவகாரம் உச்சகட்ட மோதலில் சந்தோஷ் நாராயணன் மற்றும் அறிவு

என்ஜாய் எஞ்சாமி ராயல்டி விவகாரம் உச்சகட்ட மோதலில் சந்தோஷ் நாராயணன் மற்றும் அறிவு

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலின் ராயல்டி மற்றும் உரிமை தொடர்பாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் அறிவு இடையே சமூக வலைதளங்களில் நேரடி வார்த்தை போர் வெடித்துள்ளது. பாடலுக்கு உழைத்த தனக்கு இதுவரை உரிய ஊதியமோ அல்லது அங்கீகாரமோ வழங்கப்படவில்லை என்று அறிவு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இது கலைஞர்களின் உழைப்பிற்கான உரிமைப் போராட்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள சந்தோஷ் நாராயணன், அறிவின் அனைத்து சட்ட ரீதியான வாதங்களும் தவறானவை என்று மறுத்துள்ளார். பாடலின் மெட்டு மற்றும் தயாரிப்பு தன்னுடையது என்றும், அதன் கருப்பொருள் இயக்குனர் மணிகண்டனுடையது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், ஆதாரங்களுடன் நேரடி விவாதத்திற்குத் தயாரா என அறிவுக்கு சந்தோஷ் நாராயணன் சவால் விடுத்துள்ளதால் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *